Sunday 19 June 2022

முனிராஜ் மறவர் புரளிகளுக்கு மறுப்பு..


கட்டாலங்குளம் ஜமீன் அழகுமுத்து துரைச்சாமி அவர்களின் தம்பி செவத்தசாமி அவர்களின் பள்ளி சான்றிதல் குருகுலராயர்களான அகமுடையார்களின் உறவினர்களான யாதவர் சமுதாய உறவினர்களால் இனைவெளியில் பகிரப்பட்டது..(சான்றிதல் மேலே),

இதற்கு புரளியான விவரங்களை கூறிய முனிராஜ் மறவர் அவர்களின் பதிவு கீழே;👇
கிருஷ்ண கோத்திரம்,கோபால வம்சம் என்றாலே அவர்கள் "யதுகுலம் யாதவர்" என்பதை புரிந்துகொள்ள அடிப்படை இந்திய வரலாறு அறிந்த குழந்தைக்கு கூட இயலும் ஆயினும் "கால்நடை மருத்துவர் முனிராஜ் மறவர்" அவர்கள் சமுதாயம் தென் தமிழகத்தின் மூன்று மாவட்டங்களை தவிற வேறு எங்கும் வாழ்ந்திடாத மைனாரிட்டி சிறுபான்மை தமிழ்சாதி என்பதால் அவர்கள் பரந்து விரிந்த நாவலந்தீவின்(இந்திய) வரலாற்றை அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்தே சாதிச்சான்றிதழ் யாதவர் உறவினர்களால் பகிரப்பட்டது அதற்கும் தவறான பொருள்கூறி பதிவிட்ட "மைனாரிட்டி மறவர்" சமுதாய முனிராஜ் அவர்களின் உளரல்களுக்கு தகுந்த விளக்கங்களை யாதவர் சமுதாய உறவினர்கள் கூறியுள்ளனர் அதை அப்படியே கீழே பகிரப்படுகிறது...

**************************************************************************************

கட்டாலங்குளம் வாரிசுகளின் SSLC சான்றிதழ் மீது பரப்பப்படும் புரளி :(மேலே முனிராஜ் மறவர் பதிவு படம் காண்க)
-------------------------------------------------------------------------

கட்டாலங்குளம் அழகுமுத்துசேர்வை வாரிசுகளின் SSLC சான்றிதழ்கள் மீது புரட்டுகளை அவிழ்த்துவிடும் நபர்களுக்கான விரிவான விளக்கம்.

● கேள்வி :

இது பள்ளி மாற்று சான்றிதழ்/T.C. Certificateடா ?

● பதில் : 

இல்லை, SECONDARY SCHOOl LEAVING CERTIFICATE அதாவது உயர்நிலைப் பள்ளியை முடித்ததற்கு சான்றாக வழங்கப்படும் சான்றிதழ், இதன் சுருக்கமே SSLC (எஸ்.எஸ்.எல்.சி) எனப்படுகிறது.

● கேள்வி :

1949ல் இப்பள்ளியின் பெயர் வ.உ.சி.பள்ளியா ?

● பதில் : 

இல்லை, இப்பள்ளி 1918ல் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் நிறுவப்பட்ட பள்ளி அப்போது இப்பள்ளியின் பெயர் 
"Koilpatti Board High School"

சுதந்திரம் கிடைத்த பிறகு 1950-1952ல் Koilpatti Board High School என்னும் பெயர் அரசால் வ.உ.சிதம்பரனாரின் நினைவாக V.O.C.Board High School என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

கட்டாலங்குளம் வாரிசுதாரர் திரு.K.துரைசாமி அவர்கள் 1949ல் இப்பள்ளியில் சேரும் போது Koilpatti Board High School என இருந்தது அவர் பள்ளி முடிப்பதற்கு இடைப்பட்ட ஆண்டில் V.O.C.Board High School என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டதால் அவரின் உயர்நிலைப்பள்ளி முடிவு சான்றிதழில் V.O.C.Board High School என்றே முத்திரை (Seal) பதிக்கப்பட்டுள்ளது.

______


1940-50களில் பள்ளி படிநிலை :
----------------------------------------------------------

கடந்த கால கல்வி முறையின் அமைப்பு மற்றும் படிநிலைகள் தற்கால வழக்கிற்கு மாறாக இருந்தது. அதாவது,

முதலாம் வகுப்பு
இரண்டாம் வகுப்பு
மூன்றாம் வகுப்பு 
நான்காம் வகுப்பு
ஐந்தாம் வகுப்பு
 
இந்த 5வகுப்புகள் தற்கால வழக்கில் உள்ளதை போலவும்

இதற்கு பிறகான உயர் படிப்புகள் FORMS என்கிற அடிப்படையில் கீழ்கண்டவாறு கணக்கிடப்பட்டது.

FORM - I
FORM - II
FORM - III
FORM - IV
FORM - V
FORM - VI

இதில் உயர்நிலைப்பள்ளியில் இறுதி ஆண்டாக FORM - VI இருந்தது இதுவே அக்காலத்து SSLC படிப்பாகும்.
(FORM - VI படிக்கும் மாணவர்களின் இறுதி தேர்வாக SSLC பொதுத்தேர்வு இருக்கு இதை எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே SECONDARY SCHOOL LEAVING CERTIFICATE வழங்கப்படும்).

FAIL ஆகாமல் படித்தால் சராசரியாக 16-17 வயதில் Form VI படிக்க வேண்டும்.

நம்முடைய சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் கட்டாளங்குளம் அழகுமுத்து சேர்வைக்காரர் வம்சாவளிகளும் திரு.காசிச்சாமி அவர்களின் மகன்களுமான

1, K.துரைசாமி (மூத்தவர்)

2, K.செவத்தசாமி (இளையவர்) ஆகியோர்.

மூத்தவர் துரைசாமி 1949ம் ஆண்டிலும், இளையவர் செவத்தசாமி 1953ம் ஆண்டிலும் உயர்நிலைப்பள்ளியில் Form IV ல் சேர்க்கப்பட்டார்கள்.
_____


துரைசாமியின் கல்வி விவரம் :
----------------------------------------------------------

மூத்தவர் துரைசாமி படிப்பில் சற்று ஆர்வம் குறைந்தவர் என்பதால் முந்தைய நடுநிலைப்பள்ளி படிப்பிலேயே 2 வருடங்கள் FAIL ஆன காரணத்தினால் சராசரியாக 14 வயதில் படிக்கவேண்டிய Farm 4 வகுப்பை 16 வயதில் உயர்நிலைப்பள்ளியில் படிக்கத்துவங்குகிறார்.

பிறகு, மீண்டும்
FORM 4 = 1 வருடம்
FORM 5 = 1 வருடம்
FORM 6 = 1 வருடம்
என மூன்று வருடங்கள் படிக்கவேண்டிய படிப்பில் 2 முறை FAIL ஆகி தனது 20ம் வயதில் தான் FORM 6 எனப்படும் SSLCயை முடிக்கிறார். 
ஆக மொத்தம் உயர்நிலை கல்வி மட்டுமே 1949-1954 வரை 5 ஆண்டுகள் படித்தவர்.
____

செவத்தசாமியின் கல்வி விவரம் :
----------------------------------------------------------------

இளையவர் செவத்தசாமி பள்ளிப்படிப்பில் ஆர்வத்துடன் விளங்கியுள்ளார் இதை அவரசு பள்ளிச் சான்றிதழ் மூலமாகவே விளங்கிக்கொள்ள முடியும்.

இவர் முந்தைய நடுநிலைப்பள்ளி வகுப்புகளில் தொடர்ச்சியாக PASS ஆகிக்கொண்டே வந்ததால் Form 4 படிக்க சராசரி வயதான 14ம் வயதிலேயே சேர்ந்து உயர்நிலை கல்வியிலும் சிறப்பாக படித்ததால் FORM 4 = 1 வருடம்
FORM 5 = 1 வருடம்
FORM 6 = 1 வருடம்
என மூன்று வருடங்கள் படிக்கவேண்டிய படிப்பை அதே மூன்று வருடங்களில் படித்துமுடித்துள்ளார்.
ஆக மொத்தம் உயர்நிலை கல்வியை 1953-1956 வரை என 3 ஆண்டுகள் படித்தவர்.
_________
● கேள்வி :

1954ல் படிப்பை முடித்த K.துரைசாமியின் சான்றிதழின் மேல் பாகத்தில் உள்ள முத்திரையில் (Seal) 30 SEPT 1950 என்றும்

1956ல் படிப்பை முடித்த K.செவத்தசாமியின் சான்றிதழின் மேல் பாகத்தில் உள்ள முத்திரையில் (Seal) 10 AUG 1956 என்றும் பதிந்துள்ளதே

அப்போது இவர்கள் பள்ளிப்படிப்பு முடிப்பதற்கு முன்பே சான்றிதழ் வழங்கப்பட்டதா ?

● பதில் :

இல்லை, அதாவது திரு.துரைசாமி மற்று அவரது தம்பி செவத்தசாமி படித்த காலத்தில் பள்ளியிறுதி வகுப்புச் சான்றிதழ்கள் புத்தக வடிவில் பல வண்ண அட்டைகளோடு வழங்கப்படும்.

புதிய Batchல் சேர்ந்த மாணவர்களுடைய விவரங்களின் அடிப்படையில் அவர்கள் சேர்ந்த இரண்டாம் ஆண்டிலேயே அவர்கள் தொடர்புடைய பள்ளிக் கூடங்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலரால் அவரது முத்திரையிடப்பட்டு (அவர் பள்ளிக்கு அனுப்பிவைக்கும் நாள் கணக்கு, ஆண்டு உள்ள முத்திரை) படிப்பை முடிக்கவிருக்கும் வருடமும் மற்றும் பள்ளி முத்திரையும் நிரப்பப்படாத சான்றிதழ் புத்தகங்கள் அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலை பள்ளிக்கூடங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். 

இந்த Batch மாணவர்கள் SSLC தேர்வாகி பள்ளிப்படிப்பை முடிக்கும் போது இதே சான்றிதழ் படிவம் பள்ளி நிர்வாகத்தால் மாணவர் விவரங்கள் நிரப்பப்பட்டு தேர்ச்சிக்கு அடையாளமாக வழங்கப்படும்.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் ஒரு Batchக்கு ஒதுக்கப்பட்ட ஆண்டின் முத்திரை பதித்த சான்றிதழ் அந்த Batch மாணவர்களுக்கே வழங்கப்படும். ஒருவேலை அவர்கள் இடையில் தேர்வுகளில் FAIL ஆகி எத்தனை வருடங்கள் மீண்டும் மீண்டும் படித்து கூடுதல் ஆண்டுகளில் தேர்ச்சிப்பெற்றாலும்  கூட அவர்களுக்கு ஆரம்பத்தில் இரண்டாம் ஆண்டில் மாவட்ட கல்வி அதிகாரியால் முந்தைய ஆண்டுகளில் முத்திரை பதித்து வழங்கப்பட்ட சான்றிதழிலேயே விவரங்கள் நிரப்பப்பட்டு வழங்கப்படும்.

இந்த முறையின் அடிப்படையில் 1949ல் பள்ளியில் சேர்ந்த துரைசாமி முதலியோர் Batchக்கு அவர்களின் 2ம் ஆண்டான 1950ல் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட கல்வி அதிகாரி மாணவர்களுக்கு தேவையான சான்றிதழ்களை தயாரித்து அதில் தான் பள்ளிக்கு வழங்கும் நாளான 30 SEPT 1950ஐ முத்திரையாகப் பதித்து அனுப்பிவைத்துள்ளார்.

துரைசாமி அவர்கள் 5ஆண்டுகள் படிப்பை முடித்தவுடன் இதே சான்றிதழில் அவர் படித்த வருடங்களை நிரப்பி அத்துடன் V.O.C.Board High School, Koilpatti என்னும் பள்ளி முத்திரையையும் இட்டு பள்ளி நிர்வாகம் அவருக்கு வழங்கியுள்ளது.

இதே போன்று இவரின் தம்பி செவத்தசாமிக்கும்.

1953ல் பள்ளியில் சேர்ந்த செவத்தசாமி முதலியோர் Batchக்கு அவர்களின் 2ம் ஆண்டான 1954ல் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட கல்வி அதிகாரி மாணவர்களுக்கு தேவையான சான்றிதழ்களை தயாரித்து அதில் தான் பள்ளிக்கு வழங்கும் நாளான 10 AUG 1954ஐ முத்திரையாகப் பதித்து அனுப்பிவைத்துள்ளார்.

செவத்தசாமி அவர்கள் 3ஆண்டுகள் படிப்பை முடித்தவுடன் இதே சான்றிதழில் அவர் படித்த வருடங்களை நிரப்பி அத்துடன் V.O.C.Board High School, Koilpatti என்னும் பள்ளி முத்திரையையும் இட்டு பள்ளி நிர்வாகம் அவருக்கு வழங்கியுள்ளது.

                                                          முற்றும்... 
_________

இவ்வண்ணம் கட்டாலங்குளம் அழகுமுத்து சேர்வைக்காரர் வாரிசுதார் களின் SECONDARY SCHOOl LEAVING CERTIFICATEடின் (SSLC) மீதாக சுமத்தப்பட்ட பொய் புரட்டுகளை நீக்கி விவரங்கள் விளக்கப்பட்டுள்ளது.

மேலும் இதில் கூறியுள்ளபடியே அவர்கள் "யாதவர் சமூகத்தை' சார்ந்தவர்கள் என்பது மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.
___________

பதிவிற்கு உரிய சில தகவல்களையும், முந்தைய கல்விமுறை பற்றியும் தெரிவித்த ஐயா திரு.ச.சுப்பிரமணியன் அவர்களுக்கு உளமார்ந்த நன்றி 🙏

___________________________________________

திரு முனிராஜ் மறவர் அவர்களே,

* SSLC சான்றிதழை TC என்கிறீர்கள்,

* மாவட்ட கல்வி அதிகாரி முத்திரையை பள்ளி தலைமை ஆசிரியர் முத்திரை என்கிறீர்கள்,

* IV மற்று VI Forms படிப்பை நான்காம் வகுப்பு, ஆறாம் வகுப்பு என்கிறீர்கள்,

* 30-Sept-1950ஐ 3தேதி 1970 என்கிறீர்கள்,

* 16 வயதில் 4ம் வகுப்பு, 20 வயதில் 6ம் வகுப்பு என்கிறீர்கள்,

அந்த காலத்து கல்வி முறையை பத்தி தெரியவில்லை என்றால் தெரிந்துகொண்டு பேசவேண்டும் அதுதானே நியாயம்.

சான்றிதழ் வழங்கும் அடிப்படை முறையே தெரியவில்லையே உங்களுக்கு, 

ஆனால் எல்லாம் தெரிந்தது போல பதிவு போட்டுள்ளீர்கள்...

#Alagumuthu_Servai #Alagumuthukon #Kattalankulam...


**************************************************************************************

மேல் உள்ள விரிவான விளக்கங்கள் யாதவர் உறவினர்கள் தெரிவித்தவையாகும்...

இதன் வழி குருகுலராயர்களான அகமுடையார் சமுதாய உறவினர்கள் புரிந்துகொள்ள வேண்டியவை:

யதுகுலம் யாதவர் வரலாறு,
குருகுலராயன் அகமுடையார் வரலாறு,

இரண்டையும் தாம்தான் எனக்கூறும் வரலாற்று திருடர்கள் அனைவரிடத்திலும் பாதுகாப்பாய் இருக்கவேண்டும் என்பதே இக்கட்டுரை வழியில் எமது அகமுடையார் சமுதாய உறவினர்களிடத்தில் கேட்டுக்கொள்வதாகும்....

இங்கனம்;

ஆயர் & அகமுடையார் ஒற்றுமை ஓங்குக...

@ VKGN குருகுலராயன் சுரேஷ் அகமுடையாத் தேவன்...

Wednesday 1 June 2022