Saturday 1 October 2022

அதிகைமான் மாளவசக்கரவர்த்தி..

கங்கை கொண்டான் என்ற பெயருடன் மாளவ சக்கரவர்த்தி மற்றும் அதிகைமான் எனவும் கூறப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்...


***

குருவங்கிச பூர்வாதிராயர் கல்வெட்டு..

***

Friday 30 September 2022

ஆதித்த கரிகாலன் கல்வெட்டு..

ராஜராஜன் பெற்றோர் சிறப்பு..

#இராசராசன் தன் பெற்றோர்களின் குலபெருமை கூறும் கல்வெட்டு

"பென்னியின் செல்வன்" 
 இல்லை இல்லை எங்கள் பென்னைநதியின் இளவரிசி, வானவன்மாதேவி
"மலைமகள் செல்வன்".

செம்பியன் சுந்தர சோழர்
புலியை பாய்ந்த பொன்மான்
மலையர் திருக்குல தொன்மை
பெண்னை தென்கரை
கபிலகல்
பாரி,
பாரி மகளிர்
செஞ்சொற் கபிலர்

#மலையர்திருக்குலம் 
#பாரிமகளிர்

Tuesday 9 August 2022

சாளுக்கியர் லினேஜ்..

**
**
**
**

வேங்கி சாளுக்கியர் வம்சாவளி மரபு:
---------------------------------------------------------------------

#வேங்கி_சாளுக்கி_வம்சாவளி

வேங்கி சாளுக்கியர்கள் தங்களின் சந்திர வம்சாவளி மரபினை பல கல்வெட்டுகள் செப்பேடுகளிலும் வெளியிட்ட போதிலும், நாம் இங்கே மேற்கோள் காட்டவிருப்பது இரண்டு சாசனங்கள்:

1, நான்காம் விக்ரமாதித்த சாளுக்கியன் கல்வெட்டு

2, வீரசோழனாரின் (1091-1092) செல்லூர் செப்பேடு

4ம் விக்ரமாதித்த சாளுக்கியன்
கல்வெட்டு:
----------------------------------------------------------

வேங்கி சாளுக்கிய அரசர் நான்காம் விக்ரமாதித்த சாளுக்கியரின் 38வது ஆட்சியாண்டு கல்வெட்டு சாளுக்கிய வம்சாவளியை தெளிவாக கூறுகின்றது இதன்படி சாளுக்கிய வம்சம் ஸ்ரீமகாவிஷ்ணுவிடமிருந்து தோன்றியது அந்த மரபில் அத்திரிமாமுனிவர் ⇒சந்திரதேவர் ⇒ புதன் ⇒ புருரவா ⇒ ஆகியோர்களின் வம்சாவளி வரிசையில் சாளுக்கிய மரபு தோன்றியது எனக் குறிப்பிடுகிறது.

வீரசோழனின் செல்லூர் செப்பேடு:
--------------------------------------------------------------

சோழ மன்னன் வீரசோழனார் கி.பி.1091-1092 ஆண்டில் வெளியிட்ட செல்லூர் செப்பேட்டு சாசனம் சசி குலத்து சாளுக்கிய பேரரசின் மரபை கீழ்கண்டவராறு விவரிக்கின்றது.

அத்திரிமாமுனிவர் ⇒சந்திரதேவர் ⇒ ஆயு ⇒ யயாதி ⇒ புரு மகாராசன், இவர்களின் வம்சாவளி வரிசையில் சாளுக்கிய அரச மரபு தோன்றியது எனக் குறிப்பிடுகிறது.

இவைகளின் மூலம் சாளுக்கியர்கள் சந்திரகுலத்தவர்கள் என்பதும் அவர்களின் வம்சாவளி தொடர்ச்சியான முன்னோர் வழிகளைக் கொண்டது என்பதும் தெளிவாகிறது.
*****
*****

Monday 8 August 2022

திருக்காளத்தி தேவன்..

***
***
***

South indian Inscriptions, Volume - 3 :
-------------------------------------------------------‐--------------

"Yadavaraya prince Simha alias Virarakshasa-Yadavaraja, the son of Yadavaraja alias Tirukkalattidava.
Both Tirukkalattideva and his son claimed descent from the #Eastern_Chalukya_family."

திருக்காளத்திதேவன் என்னும் பெயர் கொண்ட யாதவராஜாவின் மகன் வீர ராட்சச யாதவராஜா (என்ற) இளவரசர் சிம்ஹன்.

யாதவராய அரசரான திருக்காளத்திதேவன் மற்றும் அவரது மகன் ஆகிய இருவரும் கிழக்கு சாளுக்கிய குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்;

அவர்கள் #வேங்கிவல்லபர் மற்றும் #சசிகுல_சாளுக்கி ஆகிய குலத்தலைப்புகளை உடையவர்கள்.

         -  South indian Inscriptions Volume - 3

#Yadavarayas_The_descendant_of_Eastern_Chalukyas
#Chalukya #Yadavaraya #Golla #Ayar #Yadava #Vengi_Chalukyas

-###


ஒட்டக்கூத்தரும் குலோத்துங்கசோழனும்..

***
***
***
***

துவாரகை கிருஷ்ணர் மரபில் சந்திர குலத்தில் தோன்றிய சாளுக்கிய சோழன் :
--------------------------------------------------------------------------

"Kulothunga Chola Ulaa" Which written by the great Poet Ottakoothar who the royal Poet of Kulothunga Chola's Court. In this book he clearly said about Chalukya-Cholas lineage

"31, கொற்றக் குலோத்துங்க சோழன் குவலயங்கள் முற்றப் புரக்கு முகில்வண்ணன்-பொற்றுவரை

32, யிந்து மரபின் றிருக்குலத்தி லுதித்துச் வந்து மனுகுலத்தை வாழ்வித்த- பைந்தளிர்க்கை"

▪︎பொற்றுவரை = Por-tuvarai (Dvaraka), 

▪︎முகில்வண்ணன் = Mugilvannan (Lord Krishna)

▪︎இந்து மரபின் = Indhu Marabil (Chandra-Kula)
-

Meaning of Poem
___________________

In these Poem lines he mentioned that Chalukya-Cholas were Descent from Dvaraka Krishna in the race of Chandra Kula (Lunar dynasty).
_

குலோத்துங்கசோழன் உலா :
------------------------------------------------------------

"31, கொற்றக் குலோத்துங்க சோழன் குவலயங்கள் முற்றப் புரக்கு முகில்வண்ணன்-பொற்றுவரை

32, யிந்து மரபின் றிருக்குலத்தி லுதித்துச் வந்து மனுகுலத்தை வாழ்வித்த- பைந்தளிர்க்கை

33, மாதர் பிடிபெற்ற வாரணமவ் வாரணத்தின் காதற் பெயரன்: கனகனவன்"

  - #கவிச்சக்கரவர்த்தி_ஒட்டக்கூத்தர்

பாடலின் பொருள் :

#துவாரகை_முகில்வண்ணனாகிய (நிலவண்ணன்) #ஸ்ரீகண்ணபிரானின் மரபில் அவனது #சந்திர_திருக்குலத்தில் தோன்றி மனு குலமாகிய கரிகாலன் வழிவந்த சோழர் குலத்தை வாழ்வித்தவன் கரிகால சோழன் என்று இப்பாடல் வெளிப்படையாய் தெரிவிக்கின்றது. இந்நூலின் மகத்துவம் என்னவென்றால் சோழ அரசின் மிக முக்கியத்துவம் மிகுந்த அவைப்புலவர் ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்டு இரண்டாம் குலோத்துங்க சோழன் முதலானவர்கள் கேட்டுணர்ந்து மகிழ்ந்த பெருமைக்குரியது. எனவே இந்நூலில் சாளுக்கியர்-சாளுக்கிய சோழர்களின் மரபை அறிய உதவும் கல்வெட்டுகள் செப்பேடுகளை காட்டிலும் மிக மிக உயர்ந்த தன்மையுடையது.

சந்திரகுலத்தில் துவாரகாபுரி ஸ்ரீகிருஷ்ணரின் யாதவ மரபில் குலோத்துங்கனின் தந்தைவழி வம்சமான வேங்கி சாளுக்கிய மரபு பிறந்ததாக இரண்டாம் குலோதுங்க சோழன் அவையின் முதன்மை புலவரும் கவிச்சக்கிரவர்த்தியுமான ஒட்டக்கூட்டத்தர் தனது குலோத்துங்க சோழன் உலா என்னும் நூலில் தெளிவுபட தெரிவிக்கின்றார்.

சந்திரகுலத்தில் துவாரகாபுரி ஸ்ரீகிருஷ்ணரின் யாதவ மரபில் குலோத்துங்கனின் தந்தைவழி வம்சமான வேங்கி சாளுக்கிய மரபு பிறந்ததாக இரண்டாம் குலோதுங்க சோழன் அவையின் முதன்மை புலவரும் கவிச்சக்கிரவர்த்தியுமான ஒட்டக்கூட்டத்தர் தனது குலோத்துங்க சோழன் உலா என்னும் நூலில் தெளிவுபட தெரிவிக்கின்றார்.

_______________________________

சாளுக்கிய அரசனை போற்றும் முன் கவியரசனை போற்றுங்கள் கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் பெருமான் புகழ் வாழ்க!!! 🙏
_________________________________

#Chalukya #Chaluka_Chola #Dvaraka #Krishna_descendants #Ottakoothar #Kulothunga_Chola #Chandra_Kula #Yadava
#Golla #Ayar

*****


Sunday 24 July 2022

குருகுல மக்கள் இயக்கம் செயல்பாட்டு வரைவு..

வாழ்க தமிழ்,

மலையரசி அங்காளி துணை,

வளர்க தமிழர் ஒற்றுமை..

"குருகுல மக்கள் இயக்கம் (Regd No 4/2022)" உறுப்பினர் சேர்க்கை படிவம்..

செயல்பாடு வரைவு விளக்கம்_Part_1;

1.ஒன்றிய தலைநகரில் தமிழர் பொதுமறை படைத்த ஐயன் திருவள்ளுவர் வைகாசி அனுஷம் திருநாள் கொண்டாடுவது,, 

2.சிவாலயம் காக்க உயிர் நீத்தவரும், "ஜம்புத்தீவு பிரகடனம்" எனப்படும் இந்தியாவின் முதல் சுதந்திர பிரகடனத்தை ஜூன்_16 திருச்சியில் எழுத்தால் தெரிவித்த முதல் இந்திய விடுதலை வீரரும், ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு(379பேர்) முன்னரே திருப்பத்தூர் படுகொலை எனப்படும் நிகழ்வில் 500க்கும் மேலான அனைத்து சமுதாயத்தை சேர்ந்தவர்களுடன் இன்னுயிர் நீத்த சுதந்திர மாவீரர்களுமான "Guru_Dinesty_King(மாளவம் எனப்படும் காளையார்கோவில்_சிவகங்கை)"(Descendant of Upricharavasu Family)The First Freedom decleration King of India "மாமன்னர் மருதுபாண்டியர்கள்" அரசுவிழா & குருபூஜையை(October 24 & 27 ) இயக்கம் சார்பாக ஒன்றிய தலைநகர்களில் அனுசரிப்பது...

2;1 இந்திய சுதந்திர வரலாற்றில் தனிச்சிறப்புடைய ஜம்புத்தீவு பிரகடனம்(1801) வெளியிடப்பட்ட திருச்சியில்,மாமன்னர் மருதுபாண்டியர்களின் சிலை ஜம்புத்தீப முழு பிரகடன விளக்கத்துடன் அமைக்க தமிழக அரசிடம் வேண்டுகோள் வைக்கும் முன்னெடுப்புகள்..

3.குருகுல அரசர்களின் மைத்துனர்_யாதவன் கண்ணனின் வழித்தோன்றலும்,பாரத தேசத்தின் சுதந்திர வேட்கையின் முதல் உயிர்பலியான கட்டாலங்குளம் மாவீரரும்,விடுதலை வீரருமான,யதுகுலம் யாதவராயர் அழகுமுத்துக்கோன் வருடாந்திர அரசுவிழா_குருபூஜை(July_11) நிகழ்வை இயக்கம் சார்பாக அனுசரிப்பது..

3.1 ஆவணி மாத ரோகிணி நட்சத்திர நாளில் யதுகுலம் யாதவன் கண்ணனின் அவதார திருநாளை இயக்கம் சார்பாக கொண்டாடுவது,

4.ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை உத்திரம் & ஹஸ்தம் என அடுத்தடுத்த நட்சத்திர நாளாக வரும் "குருகுல அரசர்" மெய்ப்பொருள் நாயனார் மற்றும் "யதுகுலம்" ஆனாய நாயனார் ஆகியோரின் சிவசமய நட்சத்திர குருபூஜை நாட்களில் ஒன்றிய அளவில் இந்துமதத்தை சேர்ந்த அனைத்து சமுதாய உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் முறையான அழைப்பிதழ் வைத்து அழைத்து சிவசமய குடும்ப திருவிழாவாக சிவாலயங்களில் அல்லது திருமண மன்டபங்களில் கார்த்திகை உத்திரம் & ஹஸ்தம் நட்சத்திர சிவசமயத் திருவிழா கொண்டாடுதல்..

இந்நாளில் ஆன்மீக சொற்பொழிவு, மற்றும் சமய கலாச்சார நிகழ்வுகளுடன் இயக்கத்தின் அனைத்து இந்து சமுதாய குடும்பமும் ஆண்மீக நட்புறவுடன் சங்கமிக்கும் வருடாந்திர சமய & சமுதாய ஒற்றுமை விழாவாக வருடந்தோரும் இவ்விருநாளை உறுவாக்குதல்..

4.1 வருடம்தோறும் கார்த்திகை உத்திரம் & ஹஸ்தம் நட்சத்திர நட்களில் ஹரியானா மாநிலம் குருஷேத்ரத்தை(பரமேஸ்வரர்_கோவில்) சென்றடைவதை போல முன்திட்டமிட்டு தோராயமாக 20 முதல் 25 நாட்களுக்கு முன்னர் வரும் அக்டோபர்(ஐப்பசி) 27 மருதுபாண்டியர் குருபூஜை நாளில் காளையார்கோவிலில் புறப்பட்டு தட்சின துவாராக மன்னார்குடியில் ராஜகோபாலர் தரிசனம் முடித்து திருக்கோவிலூர்,திருவண்ணாமலை

சித்தூர் வழியாக காளஹஸ்தி, ஸ்ரீசைலம்,

ராமானுஜர் டெம்பில் ஹைதரபாத், காசி,திரிவேனி சங்கமம்,வட மதுரா, ஆயர்பாடி(கோகுலம்),ஆக்ரா,

வழியாக சென்று இறுதியாக குருஷேத்ரத்தில் நிறைவடையும் விதமாக ஆன்மீக யாத்திரையை உறுவாக்கி வருடம்தோறும் செல்லும் திட்டமிடலை வடிவமைத்தல்..

4.2 பாரத இந்துக்களின் புனித இடமான உத்திரபிரதேசம் மாநிலம் மீரட் மாவட்டம் "ஹஸ்தினாபூர்" கங்கை கரையில் 

Guru Dinesty King_மருதுபாண்டியர் 

மனிமன்டபமும் & மதுரா மாவட்டம் ஆயர்பாடி எனப்படும் கோகுலம் யமுனை நதிக்கரையில் 

yadu King அழகுமுத்துக்கோன் 

மனிமன்டபமும்,ஹரியானா 

குருஷேத்ரத்தில் இவ்விருவரின் வரலாற்று நினைவகம் தேவை என்ற வேண்டுகோளை உத்திரபிரதேச மாநில அரசிற்கும் & மத்திய அரசிற்கும் கோரிக்கையாக கூறும் விதமான செயல்பாடுகளை முன்னெடுப்பதுடன் முதல் சுதந்திர பிரகடன பெருமைமிகு அடையாளங்கள் என இந்தியாவின் அனைத்து மொழி பாடத்திலும் சேர்த்திடவும் கோரிக்கைகளை முன்னெடுப்பது.. 

4.3 ஜம்புத்தீபகற்பத்தின்(இந்திய) 

பாராளுமன்றத்தில் 

மருதுபாண்டியர், அழகுமுத்துக்கோன் சிலை வைக்கவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னெடுப்பது,

4.4 இந்தியாவின் அனைத்து மாநில தலைநகரிலும் மருதுபாண்டியர் & அழகுமுத்துகோன் சிலை வைக்க முன்னுதாரனமாக குருகுல மன்னர்களின் தலைநகர் ஹஸ்தினாபூரையும், யதுகுலத்தாரின் புணித இடம் மதுராவையும் தன்னகத்தே கொண்ட உத்திரபிரதேச தலைநகர் லக்னோவில் முதற்கட்டமாக சிலை வைக்க வேண்டும் என அம்மாநில அரசு & எதிர்கட்சி தலைவர்களின் கவணத்திற்கு இதனை கோரிக்கையாக கொண்டு செல்லும் நிகழ்வுகளை செயல்படுத்துதல்..

5.வாரணாசியில்(காசி) & தென்மதுரையில்,

Capital of Induisam என்ற பெயரில் உலகமாதா மலைமகளின் தந்தை பெயரில் "இமவான் திருக்கோவில்" கட்டுவதற்கு 100 ஏக்கர் இடம் ஒதுக்க மத்திய அரசு & உத்திரபிரதேச அரசு,தமிழக அரசிடம் கோரிக்கை வைப்பது, இது தொடர்பாக அரசின் கவணத்திற்கு கொண்டு செல்லும் விடயங்களை முன்னெடுத்தல்..

5.1சிவசமயத்தவர் அனைவரின் தாய்வழி பாட்டன் "எயினர்" தலைவன் இமவானுக்கு இந்துக்களின் புண்ணிய நகரம் உத்திரபிரதேச காசியிலும், கடம்பவனம் எனப்படும் மதுரையிலும் 

16 தமிழ்சமுதாய பெயரிலான விழா மன்டபம்,

63 நாயனார் மனிமன்டபம்,

276 சிவாலய சுற்றுப்பிரகாரம், உலகின் பெரிய நந்தி சிலை, ஆகியவற்றுடன் உலகின் உயரமான பிரம்மான்ட 

இமவானின்  சிலையுடன் ஆயிரம் கோடி.ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள "இமவான் திருக்கோவில் அறக்கட்டளை" உறுவாக்குதல் தொடர்பான முன்னெடுப்புகளை செய்தல் மற்றும் இதற்கான பொது விளம்பரங்களை செய்தல்,

5.2இக்கோவில் கட்டி முடிக்கப்பட்ட பிறகு தாய் மதம்(இந்து) திரும்ப விரும்பும் கிறிஸ்தவர்,இஸ்லாமியர் உட்பட எவரையும் சிவசமயத்தவர் அனைவரின் தாய்வழி பாட்டன் இமாவன்(பர்வதராஜகுலம்) குடும்பத்தவராக ஏற்று அவர்களின் தலைமையகமாக இக்கோவிலின் இவ்வறக்கட்டளையை அடையாளப்படுத்த வழிகாட்டுதல்..

5.3இமயம் முதல் குமரி வரையானவர்களில் தாய் மதம் திரும்புபவர்களை பிற்படுத்தப்பட்டோர்(OBC) வகைப்பாட்டில் இந்து "பர்வதராஜகுலம்" & "பர்வதராஜபுத்திரர்" என்ற பெயரில் 

BC கேட்டகிரியில் சாதிச்சான்று வாங்கிடவும், அரசு ரீதியான முறையில் இடஒதுக்கீட்டையும் பெற வழிவகை செய்யும் முயற்சிகளை ஆராய்ந்து சட்டபூர்வ முன்னெடுப்புகளை செய்தல்..

6.தை மாதம் மிருகசிரிசம் நட்சத்திர நாளில் பொத்தப்பி மலையன் வேட்டுவர் சமுதாய கண்ணப்ப நாயனார் குருபூஜையை கொண்டாடுதல்,63 நாயனாரை போற்றுதல்,

6.1ஆடி மாதம்மழவர் பெருமகன் "வல்வில் ஓரி"அரசு விழாவிற்கு இயக்கம் சார்பாக மரியாதை செய்தல் ஆடி_18 சுவரொட்டி வாழ்த்து தெரிவித்தல்..

6.2கோடை மலையன் கடியநெடு வேட்டுவனுக்கு கொடைக்கானலிலும்,வல்வில் வேட்டுவன் நள்ளிக்கு ஊட்டியிலும் சிலை அமைத்து தரும் கோரிக்கைகளை பிரசுரித்து அரசின் கவணத்திற்கு கொண்டு செல்லுதல்...

7.சோழநாட்டு பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் வருடாந்திர சதயவிழாவிற்கு(May_23) இயக்கம் சார்பாக மரியாதை செய்தல் வாழ்த்து சுவரொட்டி அச்சடித்தல்..


8.செங்குந்தர் சமுதாய கொடிகாத்த குமரன்(ஜனவரி_11) வீரவணக்கம், 64வது நாயனார் கிருபானந்த வாரியார் ஐப்பசி ஆயில்யம் குருபூஜை, சிவமைந்தர்களான முருகன்,நவவீரர் அவதார நிகழ்வுகளை கொண்டாடுதல் சுவரொட்டி அச்சடித்து வாழ்த்து தெரிவித்தல்..

9.தமிழ்நாடு பெயர் சூட்டவேண்டும் என உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த சங்கரலிங்கனார்(நாடார்) நினைவுநாள் (October_13), 


பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை(July_15) கொண்டாடுதல் சுவரொட்டி அச்சடித்தல்,போர்பயிற்சி ஆசான்ஈழச்சான்றார் ஏனாதிநாத நாயனார் புரட்டாசி உத்திராடம் குருபூஜை நிகழ்வை கொண்டாடுதல் 63 நாயானாரை போற்றி சுவரொட்டி வாழ்த்து தெரிவித்தல்,

10.ஏழிசை மோகனர் தியாகராஜ பாகவதர்(கம்மாளர்_விஸ்வகர்மா) மார்ச்_1 பிறந்தநாள் மற்றும் வருடாந்திர விஸ்வகர்மா ஜெயந்தி(September_17) நிகழ்வை இயக்கம் சார்பாக நடத்தி சுவரொட்டி அச்சடித்து வாழ்த்து தெரிவித்தல்..

11.அறுபத்து மூவர் நாயனார்களுக்கான திருத்தொண்டர்தொகை படைத்தவரான சுந்தரமூர்த்தி நாயனார்(ஆதிசைவர்) ஆடிமாத சுவாதி நட்சத்திர குருபூஜை விழாவை செய்தல் சுவரொட்டி அச்சடித்தல், நாயனார் 63வரை போற்றுதல்..

12.இசைத்தமிழ் அன்னை காரைக்கால் அம்மையார்(செட்டியார்) பங்குனி சுவாதி குருபூஜை கொண்டாடுதல்,நாயனார் 63வரை போற்றுதல்..

13.சந்தத்தின் தந்தை எனப்படுபவரும்,சமணர்களை வென்று சைவத்தை நிலைநிருத்தியவருமான திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார்(பிராமணர்) வைகாசி மூல நட்சத்திர குருபூஜை கொண்டாடுதல், நாயனார் 63வரை போற்றுதல்..

15.இயக்க உறுப்பினராக இந்துமதத்தவர் மட்டுமே இயலும் ஆனால் மதங்கள் கடந்த சமுதாய நல்லினக்கத்தை போற்றுவது நமது இயக்கம் என்பதால் தூத்துக்குடியின் மாநகர தந்தை ஐயா குரூஸ்பர்ணாந்து அவர்களுக்கு வருடாந்திர மரியாதை செய்தல், சங்க இலக்கியம் போற்றும் நெய்தல் மன்னன் "தென் பரதவனுக்கு" தூத்துகுடியிலும், நெய்தல் மன்னன் "பல்வேல் மத்திக்கு" பூம்புகாரிலும் சிலை வேண்டும் என்ற கோரிக்கையையும் இந்நாளில் வாழ்த்து சுவரொட்டியாக வேண்டுகோளுடன் அச்சடித்தல்,

15;1சிந்தனை சிற்பி சிங்காரவேலர் நினைவுநாள் புகழ்வணக்கம் செய்தல்,

15;2அதிபத்த நாயனார்(மீனவர்) ஆவணி மகம் குருபூஜையை கொண்டாடுதல்..

15.3 இஸ்லாம் எங்கள் வழி இன்பத்தமிழ் எங்கள் மொழி என்று முழங்கிய "கண்ணியமிகு" காயிதே மில்லத் அவர்களின் பிறந்தநாள் & நினைவுநாள் நிகழ்வுகளை செய்து மதங்கள் கடந்த தமிழ் இன நட்பை போற்றுவது..

15.4 இளைஞர்களின் வழிகாட்டி ஐயா அப்துல் கலாம் அவர்களுக்கு வருடாந்திர நினைவேந்தல் செய்தல்..

இதுவரையான நமது இயக்க செயல்பாடுகள் தாய்த்தமிழ்குடிகளில் 12 சமுதாயத்தவர்களுடன் தொடர்புடையது என்பதை தெளிவுபடுத்துகிறோம்...


           "Other Tamil Hindus"


14.நேச நாயனார்(நெசவாளர்),


நந்தர் எனப்படும் திருநாளைபோவார் நாயனார்(புலையர்_பறையர்)

திருக்குறிப்பு தொண்ட நாயனார்(வண்ணார்),

திருநீலகண்ட நாயனார்(குயவர்),

ஏயர்கோன் கலிக்காம நாயனார் (ஹேஹேயர் மரபு),

மிழலை குறும்ப நாயனார்(குறும்பர்)

ஆகியோரது குருபூஜை நாட்களிலும்,

மற்றும் 63 நாயனார்களின் குருபூஜை வழிபாட்டையும் சிவாலயங்களில் செய்வதுடன் தொடர்புடைய சமுதாயத்தவர்களிடம் சிவசமய நாயனார் வருடாந்திர வழிபாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்..

14;1 இருபதாம் நூற்றான்டின் தமிழின பெருமை மிகு அரசியல் அடையாளமும், ஆளுமைகளுமான 

இரெட்டமலை சீனிவாசன்(பறையர்) முத்துராமலிங்கத்தேவர்(மறவர்),மூக்கையா தேவர்(கள்ளர்),    இராமசாமி படையாச்சியார்(வந்நியர்),

ஆகியோருக்கு வருடாந்திர மரியாதை நிகழ்வை இயக்கம் சார்பாக செய்தல்..

14;2பூலித்தேவன் மடியில் குடல் சரிந்தபடி உயிர்துறந்த வெண்ணி காலாடியார், மற்றும் கப்பலோட்டிய பெருந்தமிழர்    வ.உ சிதம்பரம் பிள்ளை ஆகியோருக்கு வருடாந்திர மரியாதை செய்தல்..

(other tamil hindus கேட்டகிரியில் 10க்கும் மேலான சமுதாயங்கள் தொடர்புடைய நிகழ்வுகள் உள்ளதை நினைவூட்டுகிறோம்)


"Other Language Hindus"

15.தெலுங்கு வருடப்பிறப்பு & கேரள ஓணம் & மகாவீர் ஜெயந்தி திருநாள் வாழ்த்துகளை இயக்கம் சார்பாக தெரிவிப்பது சுவரொட்டி அச்சடித்தல்,

16.இங்கனமான நிகழ்வுகளை இயக்கம் சார்பாக ஒன்றியம்தோரும் செய்ய ஒவ்வொரு ஒன்றியத்திலும் நமது இயக்கத்தின் முதற்கட்ட செயல்பாடுகள் தொடர்புடைய 12 சமுதாயங்களில் இருந்து ஆயிரத்தி இருநூறு பேரையும்,

other "Tamil" Hindus கேட்டகிரியில்(10க்கும் மேலான சமுதாய) 500 பேரையும், 

மாற்றினத்து(மொழி) இந்துக்களில் இருந்து 300 பேரையும் என 

ஒன்றியம்தோரும் 2 ஆயிரம்பேரை(இந்துமத) இயக்க உறுப்பினராக்குவதை 

"குருகுல மக்கள் இயக்கம்" முதற்கட்ட இலக்காக கொள்கிறது..

இயக்க உறுப்பினர் அல்லாமல் நமது இயக்க வெப்சைட்டில் நமது ஆண்மீக & பொது செயல்பாடுகளின் ஆதரவாளர்களாக பதிவுசெய்துகொண்டு வழிகாட்டுனர்களாகவும் & நிதி மூலதன நன்கொடையாளராகவும் உதவிடும் அனைத்து மத & சமுதாய உறவுகளையும் இயக்கம் அனுமதித்து வரவேற்கிறது..

17.இயக்க அங்கத்தினர்கள் அனைவரின் ஆலோசனைகளை பரிசீலித்து அமைப்பு பெயரில் செய்யப்படும் எதற்கும் ஒப்புதல் அளிக்க வேண்டியது இயக்கத்தின் 

ஐவர் கமிட்டி எனப்படும் நிருவனர்_தலைவர்,

நிரந்தர கௌரவத்தலைவர்(யாதவர்)

மாநில தலைவர்(தேர்தல் தேர்வு),

மாநில பொதுச்செயலாளர்

(தேர்தல் தேர்வு),

மாநில பொருளாளர்(தேர்தல் தேர்வு),

ஆகியோரை கொண்ட தலைமை குழுவாகும்..

இங்கனமான ஐவர் கமிட்டி உறுப்பினர் என்னிக்கை இலக்கை அடைந்த பிறகு ஒன்றியம் தோரும் ஏற்படுத்தப்படும்,

(பின்குறிப்பு; இயக்கத்தின் மாநில ஐவர் கமிட்டி ஒப்புதல் இல்லாமல் உறுப்பினர்களோ அல்லது பொருப்பாளர்களோ தன்னிச்சையாக அமைப்பு பெயரில் செய்யும் எந்த தவறுக்கும் இயக்கம் பொருப்பேற்காது)

17.1.செயல்பாட்டு வரைவுகளில் உள்ள எதையும் காலத்திற்கு தேவையானபடி திருத்தம் செய்ய,நீக்க,புதியவற்றை சேர்க்க ஐவர் கமிட்டிக்கு அதிகாரமுள்ளது..

18.இயக்கத்தை சேர்ந்த குடும்பத்தவர்களில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான ஆரம்ப கல்வி உதவி,மேற்படிப்ப கல்வி உதவி,மருத்துவ உதவி ஆகியவற்றை இயக்கம் சார்பாக செய்யவும்,வழிகாட்டவும் ஒன்றியம் தோரும் நமது இயக்கத்தின் முதன்மை செயல்பாடு தொடர்புடைய 12 குடும்பங்கள் & Other Tamil Hindus கேட்டகிரி, & Other Language Hindus கேட்டகிரி ஆகியோரின் சாதிவாரியான மக்கள் என்னிக்கையை வீடு வீடாக குடும்ப அட்டை என்னை அல்லது குடும்பத்தலைவரின் ஆதார் என்னை அடையாள அடிப்படையாக கொண்டு உறுப்பினர் சேர்க்கையின்போது கணக்கெடுத்து அதில் இயக்கத்தின் சார்பான உதவி பெற தகுதியானவர்களை தனிக்குறியீடுடன் நமது இயக்கத்திற்கான வெப்சைட்டில் பரமாரிப்பது,, 

19.இந்து மதத்தின் அனைத்து சமுதாயங்ளை சேர்ந்தவர்களுக்கும் தங்களது சமுதாய என்னிக்கை சார்ந்த அரசியல் விகிதாச்சார பிரதிநிதித்துவமுடனும் சகோதரத்துவமுடன்,வரலாற்று பாதுகாப்புடனும் வாழும் அவசியம் & அதன் சூழல் உறுவாக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் கலந்துரையாடல்களை, கருத்தரங்குகளை ஒன்றிய தலைநகர் அனைத்திலும் ஏற்படுத்துதல்...

20.அனைத்து நிகழ்வுகளிலும் மரம் நடுதலை முக்கியமான, கட்டாயமான நடைமுறையாக பின்பற்றுவது..

20;1 செயல்வரைவில் இம்முதல் பாகத்தில் குறிப்பிட்டதை தவிற்த இந்திய அளவிலான இதர இந்துமத விழாக்களை & தேசியம் காத்த மாவீரர்கள் தின நிகழ்வை இயக்கம் சார்பாக கொண்டாடுவது தொடர்பாக மாநில பொதுக்குழு உறுப்பினர் 2ஆயிரம் பேருடன் அதேபோல மாவட்ட,ஒன்றிய பொதுக்குழு உறுப்பினர்களுடன் ஆலோசித்து முடிவு எடுப்பது..

20.2 இது அரசியல் இயக்கம் அல்ல, எனவே இவ்வியக்கத்தின் பெயரில் & இயக்க பொருப்பாளர் அடையாளங்களில் அரசியல் கருத்துகளை கூறுவதற்கும், 

ஒருவர் தனது சுயசார்பு விமர்சனங்களை எவர்மீதும் செய்யவும் அனுமதியில்லை, மேலும் எந்த கட்சியை சேர்ந்தவர்களும், எந்த சாதிசங்கத்தை சேர்ந்தவர்களும் இவ்வியக்கத்தின் செயல்வரைவை விரும்பி உறுப்பினராக, பங்களிப்பாளராக இயக்கம் அனுமதிக்கிறது.. 

(Example: ரோட்டரி சங்கம்,வணிகர் சங்கம்,விவசாயிகள் சங்கம், etc ..)

இவ்வாறாக

ஒன்றியம்தோரும் பெரும்பான்மையாகவும், 

வரலாற்று தொடர்புகளும் உள்ள 

1.இந்து மதத்தை சேர்ந்த நமது இயக்க பிரதான செய்பாடுகள்  தொடர்புடைய( முதல் 12) தமிழ் குடும்பத்தவர்களிடத்திலும்(1200பேர்),

2.Other Tamil Hindus கேட்டகிரி (500பேர்) குடும்பங்களிடத்திலும்,

3.மாற்றினத்து(மொழி) இந்து மத உறவினர்களிடத்திலும்             (Other Language Hindus 300 பேர்) 

ஆகிய ஒன்றியம்தோருமான முதன்மை பொதுக்குழு உறுப்பினர்கள் 2ஆயிரம் பேரின் உறுப்பினர் சந்தா & உறுப்பினர் அல்லாத இதர ஆன்மீக ஆதரவாளர் நன்கொடை பங்களிப்புடனான இயக்க செயல்பாடுகளின் வழியாக, 

1.இந்து மத சமுதாயங்களுக்கிடையேயான ஆண்மீக சகோதரத்துவ நட்பையும், நெருக்கத்தையும்,ஒற்றுமையையும் இந்நிகழ்வுகளின் & விழாக்களின் வழியாக ஏற்படுத்தி, 

2.தேசியம் காத்த மாவீரர்களையும் & 

3.தேசத்தின் பெரும்பாண்மையான இந்து மதத்தையும்,

4.சிவசமய 63நாயனார்களின் வழிபாடு மற்றும் இந்து சமுதாயங்களுக்கிடையேயான 

சகோதரத்துவம் ஆகியவற்றை காப்பதும், போற்றுவதும் இயக்கத்தின் முதன்மையான நான்ங்கு நோக்கமும் இலக்கும் என்பதை கூறி உறுப்பினராகவும், செயல் வீரர்களாக பொருப்புகளிலும்(பதவி),

செயலாற்ற விருப்பமுள்ளவர்களையும் & ஆதரவாளர்களாக மட்டும் பதிவுசெய்துகொண்டு உதவ விரும்புபவர்களையும் இயக்கம் வரவேற்கிறது..

மாத உறுப்பினர் சந்தா ரூ.25,    ஒரு வருடமாக எனில் சந்தா ரூ.250,

இயக்கத்திற்கான வங்கிகணக்கில் மட்டுமே உறுப்பினர் சந்தா & நன்கொடைகள் பெறப்பட்டு உறுப்பினர் அனைவரின் பார்வைக்கும் மாதாந்திர வரவு செலவு இயக்க #வெப்சைட்டில் & முகநூல் பேஜில் & யூடியூப் சேனலில் பார்க்க வசதி உண்டு என தெரிவித்துக்கொள்கிறோம்..

செயல்பாட்டு வரைவு பாகம்_1 முற்றும்..

(மாநில அளவில் முதல்கட்ட பொதுக்குழு உறுப்பினர் என்னிக்கை 2ஆயிரம்பேர் இலக்கை அடைந்த பிறகு கூடிவிவாதித்து செயல்வரைவு பாகம்_2 வெளியிடப்படும்)

மேலதிக தகவல்களுக்கு காண்க; இயக்கத்தின் வெப்சைட்..

               "இங்கனம்"


குருகுல மக்கள் இயக்கம் & அறக்கட்டளை..                    தலைமை செயலகம்,    9500888335,9884350025

வாழ்க இந்துமதம்,

வளர்க இந்துக்களின் ஒற்றுமை..

************************************************************************************

         "உறுப்பினர் சேர்க்கை பூர்த்தி செய்யும் விவர படிவம்"

இயக்கத்தின் செயல்பாடு வரைவாக குறிப்பிட்டப்பட்டுள்ளவை முழுவதையும் வாசித்து,புரிந்து,விரும்பி என்னை உறுப்பினராக இனைத்துக்கொள்கிறேன்...

1.பெயர்;

தந்தை பெயர்;

2.சமுதாயம்;

3.ரேசன்கார்டு என் அல்லது குடும்பத்தலைவர் ஆதார் என்;

4.போன் நம்பர்;

5.ஊராட்சி மன்றம் & வார்டு என்,

6.பேரூராட்சி&நகராட்சி&மாநகராட்சி & வார்டு என்;

7.மாவட்டம்;

8.குலதெய்வம்;

9.குடும்ப உறுப்பினர் என்னிக்கை;

ஆண்;  பெண்; Adults;

10; இயக்கத்தின் சார்பான உதவிபெற அரசு வருமான சான்றின்படி வறுமைகோட்டுக்கு கீழானவரா..?; 

11; இதர சிறப்பு விவரம்;

          "இப்படிக்கு"

(உறுப்பினர் கையொப்பம்)

******

Sunday 19 June 2022

முனிராஜ் மறவர் புரளிகளுக்கு மறுப்பு..


கட்டாலங்குளம் ஜமீன் அழகுமுத்து துரைச்சாமி அவர்களின் தம்பி செவத்தசாமி அவர்களின் பள்ளி சான்றிதல் குருகுலராயர்களான அகமுடையார்களின் உறவினர்களான யாதவர் சமுதாய உறவினர்களால் இனைவெளியில் பகிரப்பட்டது..(சான்றிதல் மேலே),

இதற்கு புரளியான விவரங்களை கூறிய முனிராஜ் மறவர் அவர்களின் பதிவு கீழே;👇
கிருஷ்ண கோத்திரம்,கோபால வம்சம் என்றாலே அவர்கள் "யதுகுலம் யாதவர்" என்பதை புரிந்துகொள்ள அடிப்படை இந்திய வரலாறு அறிந்த குழந்தைக்கு கூட இயலும் ஆயினும் "கால்நடை மருத்துவர் முனிராஜ் மறவர்" அவர்கள் சமுதாயம் தென் தமிழகத்தின் மூன்று மாவட்டங்களை தவிற வேறு எங்கும் வாழ்ந்திடாத மைனாரிட்டி சிறுபான்மை தமிழ்சாதி என்பதால் அவர்கள் பரந்து விரிந்த நாவலந்தீவின்(இந்திய) வரலாற்றை அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்தே சாதிச்சான்றிதழ் யாதவர் உறவினர்களால் பகிரப்பட்டது அதற்கும் தவறான பொருள்கூறி பதிவிட்ட "மைனாரிட்டி மறவர்" சமுதாய முனிராஜ் அவர்களின் உளரல்களுக்கு தகுந்த விளக்கங்களை யாதவர் சமுதாய உறவினர்கள் கூறியுள்ளனர் அதை அப்படியே கீழே பகிரப்படுகிறது...

**************************************************************************************

கட்டாலங்குளம் வாரிசுகளின் SSLC சான்றிதழ் மீது பரப்பப்படும் புரளி :(மேலே முனிராஜ் மறவர் பதிவு படம் காண்க)
-------------------------------------------------------------------------

கட்டாலங்குளம் அழகுமுத்துசேர்வை வாரிசுகளின் SSLC சான்றிதழ்கள் மீது புரட்டுகளை அவிழ்த்துவிடும் நபர்களுக்கான விரிவான விளக்கம்.

● கேள்வி :

இது பள்ளி மாற்று சான்றிதழ்/T.C. Certificateடா ?

● பதில் : 

இல்லை, SECONDARY SCHOOl LEAVING CERTIFICATE அதாவது உயர்நிலைப் பள்ளியை முடித்ததற்கு சான்றாக வழங்கப்படும் சான்றிதழ், இதன் சுருக்கமே SSLC (எஸ்.எஸ்.எல்.சி) எனப்படுகிறது.

● கேள்வி :

1949ல் இப்பள்ளியின் பெயர் வ.உ.சி.பள்ளியா ?

● பதில் : 

இல்லை, இப்பள்ளி 1918ல் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் நிறுவப்பட்ட பள்ளி அப்போது இப்பள்ளியின் பெயர் 
"Koilpatti Board High School"

சுதந்திரம் கிடைத்த பிறகு 1950-1952ல் Koilpatti Board High School என்னும் பெயர் அரசால் வ.உ.சிதம்பரனாரின் நினைவாக V.O.C.Board High School என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

கட்டாலங்குளம் வாரிசுதாரர் திரு.K.துரைசாமி அவர்கள் 1949ல் இப்பள்ளியில் சேரும் போது Koilpatti Board High School என இருந்தது அவர் பள்ளி முடிப்பதற்கு இடைப்பட்ட ஆண்டில் V.O.C.Board High School என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டதால் அவரின் உயர்நிலைப்பள்ளி முடிவு சான்றிதழில் V.O.C.Board High School என்றே முத்திரை (Seal) பதிக்கப்பட்டுள்ளது.

______


1940-50களில் பள்ளி படிநிலை :
----------------------------------------------------------

கடந்த கால கல்வி முறையின் அமைப்பு மற்றும் படிநிலைகள் தற்கால வழக்கிற்கு மாறாக இருந்தது. அதாவது,

முதலாம் வகுப்பு
இரண்டாம் வகுப்பு
மூன்றாம் வகுப்பு 
நான்காம் வகுப்பு
ஐந்தாம் வகுப்பு
 
இந்த 5வகுப்புகள் தற்கால வழக்கில் உள்ளதை போலவும்

இதற்கு பிறகான உயர் படிப்புகள் FORMS என்கிற அடிப்படையில் கீழ்கண்டவாறு கணக்கிடப்பட்டது.

FORM - I
FORM - II
FORM - III
FORM - IV
FORM - V
FORM - VI

இதில் உயர்நிலைப்பள்ளியில் இறுதி ஆண்டாக FORM - VI இருந்தது இதுவே அக்காலத்து SSLC படிப்பாகும்.
(FORM - VI படிக்கும் மாணவர்களின் இறுதி தேர்வாக SSLC பொதுத்தேர்வு இருக்கு இதை எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே SECONDARY SCHOOL LEAVING CERTIFICATE வழங்கப்படும்).

FAIL ஆகாமல் படித்தால் சராசரியாக 16-17 வயதில் Form VI படிக்க வேண்டும்.

நம்முடைய சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் கட்டாளங்குளம் அழகுமுத்து சேர்வைக்காரர் வம்சாவளிகளும் திரு.காசிச்சாமி அவர்களின் மகன்களுமான

1, K.துரைசாமி (மூத்தவர்)

2, K.செவத்தசாமி (இளையவர்) ஆகியோர்.

மூத்தவர் துரைசாமி 1949ம் ஆண்டிலும், இளையவர் செவத்தசாமி 1953ம் ஆண்டிலும் உயர்நிலைப்பள்ளியில் Form IV ல் சேர்க்கப்பட்டார்கள்.
_____


துரைசாமியின் கல்வி விவரம் :
----------------------------------------------------------

மூத்தவர் துரைசாமி படிப்பில் சற்று ஆர்வம் குறைந்தவர் என்பதால் முந்தைய நடுநிலைப்பள்ளி படிப்பிலேயே 2 வருடங்கள் FAIL ஆன காரணத்தினால் சராசரியாக 14 வயதில் படிக்கவேண்டிய Farm 4 வகுப்பை 16 வயதில் உயர்நிலைப்பள்ளியில் படிக்கத்துவங்குகிறார்.

பிறகு, மீண்டும்
FORM 4 = 1 வருடம்
FORM 5 = 1 வருடம்
FORM 6 = 1 வருடம்
என மூன்று வருடங்கள் படிக்கவேண்டிய படிப்பில் 2 முறை FAIL ஆகி தனது 20ம் வயதில் தான் FORM 6 எனப்படும் SSLCயை முடிக்கிறார். 
ஆக மொத்தம் உயர்நிலை கல்வி மட்டுமே 1949-1954 வரை 5 ஆண்டுகள் படித்தவர்.
____

செவத்தசாமியின் கல்வி விவரம் :
----------------------------------------------------------------

இளையவர் செவத்தசாமி பள்ளிப்படிப்பில் ஆர்வத்துடன் விளங்கியுள்ளார் இதை அவரசு பள்ளிச் சான்றிதழ் மூலமாகவே விளங்கிக்கொள்ள முடியும்.

இவர் முந்தைய நடுநிலைப்பள்ளி வகுப்புகளில் தொடர்ச்சியாக PASS ஆகிக்கொண்டே வந்ததால் Form 4 படிக்க சராசரி வயதான 14ம் வயதிலேயே சேர்ந்து உயர்நிலை கல்வியிலும் சிறப்பாக படித்ததால் FORM 4 = 1 வருடம்
FORM 5 = 1 வருடம்
FORM 6 = 1 வருடம்
என மூன்று வருடங்கள் படிக்கவேண்டிய படிப்பை அதே மூன்று வருடங்களில் படித்துமுடித்துள்ளார்.
ஆக மொத்தம் உயர்நிலை கல்வியை 1953-1956 வரை என 3 ஆண்டுகள் படித்தவர்.
_________
● கேள்வி :

1954ல் படிப்பை முடித்த K.துரைசாமியின் சான்றிதழின் மேல் பாகத்தில் உள்ள முத்திரையில் (Seal) 30 SEPT 1950 என்றும்

1956ல் படிப்பை முடித்த K.செவத்தசாமியின் சான்றிதழின் மேல் பாகத்தில் உள்ள முத்திரையில் (Seal) 10 AUG 1956 என்றும் பதிந்துள்ளதே

அப்போது இவர்கள் பள்ளிப்படிப்பு முடிப்பதற்கு முன்பே சான்றிதழ் வழங்கப்பட்டதா ?

● பதில் :

இல்லை, அதாவது திரு.துரைசாமி மற்று அவரது தம்பி செவத்தசாமி படித்த காலத்தில் பள்ளியிறுதி வகுப்புச் சான்றிதழ்கள் புத்தக வடிவில் பல வண்ண அட்டைகளோடு வழங்கப்படும்.

புதிய Batchல் சேர்ந்த மாணவர்களுடைய விவரங்களின் அடிப்படையில் அவர்கள் சேர்ந்த இரண்டாம் ஆண்டிலேயே அவர்கள் தொடர்புடைய பள்ளிக் கூடங்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலரால் அவரது முத்திரையிடப்பட்டு (அவர் பள்ளிக்கு அனுப்பிவைக்கும் நாள் கணக்கு, ஆண்டு உள்ள முத்திரை) படிப்பை முடிக்கவிருக்கும் வருடமும் மற்றும் பள்ளி முத்திரையும் நிரப்பப்படாத சான்றிதழ் புத்தகங்கள் அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலை பள்ளிக்கூடங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். 

இந்த Batch மாணவர்கள் SSLC தேர்வாகி பள்ளிப்படிப்பை முடிக்கும் போது இதே சான்றிதழ் படிவம் பள்ளி நிர்வாகத்தால் மாணவர் விவரங்கள் நிரப்பப்பட்டு தேர்ச்சிக்கு அடையாளமாக வழங்கப்படும்.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் ஒரு Batchக்கு ஒதுக்கப்பட்ட ஆண்டின் முத்திரை பதித்த சான்றிதழ் அந்த Batch மாணவர்களுக்கே வழங்கப்படும். ஒருவேலை அவர்கள் இடையில் தேர்வுகளில் FAIL ஆகி எத்தனை வருடங்கள் மீண்டும் மீண்டும் படித்து கூடுதல் ஆண்டுகளில் தேர்ச்சிப்பெற்றாலும்  கூட அவர்களுக்கு ஆரம்பத்தில் இரண்டாம் ஆண்டில் மாவட்ட கல்வி அதிகாரியால் முந்தைய ஆண்டுகளில் முத்திரை பதித்து வழங்கப்பட்ட சான்றிதழிலேயே விவரங்கள் நிரப்பப்பட்டு வழங்கப்படும்.

இந்த முறையின் அடிப்படையில் 1949ல் பள்ளியில் சேர்ந்த துரைசாமி முதலியோர் Batchக்கு அவர்களின் 2ம் ஆண்டான 1950ல் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட கல்வி அதிகாரி மாணவர்களுக்கு தேவையான சான்றிதழ்களை தயாரித்து அதில் தான் பள்ளிக்கு வழங்கும் நாளான 30 SEPT 1950ஐ முத்திரையாகப் பதித்து அனுப்பிவைத்துள்ளார்.

துரைசாமி அவர்கள் 5ஆண்டுகள் படிப்பை முடித்தவுடன் இதே சான்றிதழில் அவர் படித்த வருடங்களை நிரப்பி அத்துடன் V.O.C.Board High School, Koilpatti என்னும் பள்ளி முத்திரையையும் இட்டு பள்ளி நிர்வாகம் அவருக்கு வழங்கியுள்ளது.

இதே போன்று இவரின் தம்பி செவத்தசாமிக்கும்.

1953ல் பள்ளியில் சேர்ந்த செவத்தசாமி முதலியோர் Batchக்கு அவர்களின் 2ம் ஆண்டான 1954ல் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட கல்வி அதிகாரி மாணவர்களுக்கு தேவையான சான்றிதழ்களை தயாரித்து அதில் தான் பள்ளிக்கு வழங்கும் நாளான 10 AUG 1954ஐ முத்திரையாகப் பதித்து அனுப்பிவைத்துள்ளார்.

செவத்தசாமி அவர்கள் 3ஆண்டுகள் படிப்பை முடித்தவுடன் இதே சான்றிதழில் அவர் படித்த வருடங்களை நிரப்பி அத்துடன் V.O.C.Board High School, Koilpatti என்னும் பள்ளி முத்திரையையும் இட்டு பள்ளி நிர்வாகம் அவருக்கு வழங்கியுள்ளது.

                                                          முற்றும்... 
_________

இவ்வண்ணம் கட்டாலங்குளம் அழகுமுத்து சேர்வைக்காரர் வாரிசுதார் களின் SECONDARY SCHOOl LEAVING CERTIFICATEடின் (SSLC) மீதாக சுமத்தப்பட்ட பொய் புரட்டுகளை நீக்கி விவரங்கள் விளக்கப்பட்டுள்ளது.

மேலும் இதில் கூறியுள்ளபடியே அவர்கள் "யாதவர் சமூகத்தை' சார்ந்தவர்கள் என்பது மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.
___________

பதிவிற்கு உரிய சில தகவல்களையும், முந்தைய கல்விமுறை பற்றியும் தெரிவித்த ஐயா திரு.ச.சுப்பிரமணியன் அவர்களுக்கு உளமார்ந்த நன்றி 🙏

___________________________________________

திரு முனிராஜ் மறவர் அவர்களே,

* SSLC சான்றிதழை TC என்கிறீர்கள்,

* மாவட்ட கல்வி அதிகாரி முத்திரையை பள்ளி தலைமை ஆசிரியர் முத்திரை என்கிறீர்கள்,

* IV மற்று VI Forms படிப்பை நான்காம் வகுப்பு, ஆறாம் வகுப்பு என்கிறீர்கள்,

* 30-Sept-1950ஐ 3தேதி 1970 என்கிறீர்கள்,

* 16 வயதில் 4ம் வகுப்பு, 20 வயதில் 6ம் வகுப்பு என்கிறீர்கள்,

அந்த காலத்து கல்வி முறையை பத்தி தெரியவில்லை என்றால் தெரிந்துகொண்டு பேசவேண்டும் அதுதானே நியாயம்.

சான்றிதழ் வழங்கும் அடிப்படை முறையே தெரியவில்லையே உங்களுக்கு, 

ஆனால் எல்லாம் தெரிந்தது போல பதிவு போட்டுள்ளீர்கள்...

#Alagumuthu_Servai #Alagumuthukon #Kattalankulam...


**************************************************************************************

மேல் உள்ள விரிவான விளக்கங்கள் யாதவர் உறவினர்கள் தெரிவித்தவையாகும்...

இதன் வழி குருகுலராயர்களான அகமுடையார் சமுதாய உறவினர்கள் புரிந்துகொள்ள வேண்டியவை:

யதுகுலம் யாதவர் வரலாறு,
குருகுலராயன் அகமுடையார் வரலாறு,

இரண்டையும் தாம்தான் எனக்கூறும் வரலாற்று திருடர்கள் அனைவரிடத்திலும் பாதுகாப்பாய் இருக்கவேண்டும் என்பதே இக்கட்டுரை வழியில் எமது அகமுடையார் சமுதாய உறவினர்களிடத்தில் கேட்டுக்கொள்வதாகும்....

இங்கனம்;

ஆயர் & அகமுடையார் ஒற்றுமை ஓங்குக...

@ VKGN குருகுலராயன் சுரேஷ் அகமுடையாத் தேவன்...

Wednesday 1 June 2022